போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை" நிகழ்வு.
_____________________________________________
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்தரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக "சித்திரைப் புதுவருட உறுதியுரை" நிகழ்வு
இன்று (03.04.2019) பிரதேச செயலாளர் திரு .N.வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது .
இன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும், அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில் சம்மந்தப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு உறுதி பூணுமாறும் பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டதோடு அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.

















